நீ...
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை...
படம் : சதுரங்கம்
பாடல் : விழியும் விழியும்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி
ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை.
நீங்களும் கேட்டு பாருங்க...
பாடல் வரிகள் :
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு
முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்
உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...
புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்
கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்
உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்
இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு...
பாடல் வரிகள் இங்கிருந்து சுடப்பட்டது.
பதித்தவர் : ப்ரியன் @ 5 பின்னூட்டங்கள்
குறிச்சொல் பாடல்
#
பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!
#
உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!
#
என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
#
உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!
#
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!
#
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
#
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!
#
உயிரற்ற செல்களலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!
#
தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!
#
என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
#
தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!
- ப்ரியன்
பதித்தவர் : ப்ரியன் @ 10 பின்னூட்டங்கள்
வெக்கை - குறும்படம்
தமிழ் அகதி ஒருவரின் கண்ணீர் கதை...
இணையத்தில் சுட்டது...
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
குறிச்சொல் பிற