Showing posts with label வலைப்பூ. Show all posts
Showing posts with label வலைப்பூ. Show all posts

பொன்ஸ் -- கருத்துக் கணிப்பு -- முடிவு

பொன்ஸ் பா.க.ச பதிவு போட்டு நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார் என்றாலும் லேட்டாகவாவது ரிசல்ட் கொடுக்க வேண்டியது கடமையாகிறது.

கருத்துக்கணிப்பு முடிவு :



மொத்த வோட்டுக்கள் : 138
வேண்டும் : 109
வேண்டாம்! : 15
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! : 14

இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் - மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது.

எனவே , செல்லும் வோட்டுகள் 109 இவை அனைத்தும் வேண்டும்! என்ற தேர்வுக்கே செல்லுகிறது.எனவே கருத்துக் கணிப்பில் 100% சதவீதம் வேண்டும்! என்ற தேர்வுக்கே!

வோட்டு போட்ட அனைத்து பா.க.ச அன்பர்களுக்கும் + கள்ளவொட்டு போட்ட மக்களுக்கும் நன்றிகள் :)

வணக்கம் நண்பர்களே,

இந்த வார நட்சத்திர பதிப்பாளர் 'பொன்ஸ்' பற்றிய கருத்துக் கணிப்பு.இந்த வலைப்பூவில் என் கவிதைகள்(??) விடுத்து பதியப்படும் இரண்டாவது பதிவு இது.

பாலாபாயை கலாய்க்க இந்த பதிவென்பதால் இந்த சிறப்பு.பொன்ஸ் நட்சத்திர அந்தஸ்து பெற்றவுடன் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு நினைவிருக்கலாம்.இல்லாவிட்டால் மீண்டும் இங்கே

/*நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?*/

அதன் ஒரு முகமாக,இந்த கருத்துக் கணிப்பு(இன்னும் ஒண்ணு ஹி ஹி ஹி).நீங்கள் செய்ய வேண்டியது

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?

1.வேண்டும்
2.வேண்டாம்
3.பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!

என்ற மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது.'வேண்டும்' என எவ்வளவு முறை கள்ளவோட்டு போட்டாலும் கண்டுக் கொள்ளப்படமாட்டது ;).

வோட்டுப் பெட்டி இங்கே:








பா.க.ச பதிவு

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?




வேண்டும்.
வேண்டாம்!!!
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!








இங்கே காதலி = ப்ளாக்

மனதுடன் இணைந்த
காதலியை காண தடை
அம்முதல்நாளின் பரிதவிப்பு;

நண்பர்களின் துணையுடன்
காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு;

போராட்டங்கள்
ஏக்கங்களின் முடிவில்
காதலியுடன் கைக்கோர்க்க
அனுமதி
ஆகா பரவசம்.

இங்கே காதலி = ப்ளாக்

பரிதவிப்பு - தித்திப்பு - பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.

(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)

நிலவு நண்பனுக்கு ஒரு வாழ்த்துக் கவி!

'வால்'நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி

நிலவிலிருந்து கைப்பிடி
மண் கொண்டுவந்தமைக்கே
கும்மாளமிடுவோர் மத்தியில்!
அமைதியாய் ஒரு நிலவையே
தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்
இவன் இன்று!
*
இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!
*
தமிழன்னையின் கழுத்தில்
கைக்கட்டி கவிபடித்த
பிள்ளையின்
கழுத்தோடு கைகள் பூட்டி
காதல் மொழி
பேசக்காத்திருக்கிறாள் தோழி!
*
அதனாலேயே
இனி
ஞானியின் கவி கூடும்
எனக் காத்திருக்கிறோம்
ரசிகவின் ரசிகர்கள்
நாங்கள்!
*
அன்புடனின்
'வால்'நட்சத்திரத்தை
வாழ்த்தும் பெரும் அன்பு
நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்
வாழ்த்தி நிற்கிறேன் - நானும்
ஓர் சின்ன மின்மினியாய்!
*
என்றென்றும் முழு நிலவாக
'ஜஹான்' ஒளி வலம் வரட்டும்
ஞானியின் வாழ்வில்!
நிலவொளி மழையில்
நனைந்து நனைந்து
இன்னும் ஞானம் கூடட்டும் 'ஞானி'க்கு!
*
அன்புடன்,
ப்ரியன்.

கலியாணத்துக்கு போறேனுங்கோ...

நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடி கவிதையை நான் முதல் முதலில் வாசித்தது வாரமலரில் என்று நியூரான்கள் சொல்கின்றன.அப்போதுதான் நான் கவிதைகள் வாசிக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன்.வாசித்ததும் எனக்கு மனதில் தோன்றியது 'அட!'.அதற்கப்புறம்,எழுதியவர் பெயர் மறந்துவிட்டாலும் மனதுக்குள் நாற்காலிப் போட்டு அமர்ந்துவிட்டது அக்கவிதை.

நல்லதொரு பணியில் அமர்ந்தப் பிறகுதான் கவிதைகள் என்ற தவம் உடைந்த தினங்களில்,அடிக்கடி நண்பர்கள் வாயிலாக மின்னஞ்சல் தட்டி நிற்கும் எழுதியவர் பெயரில்லாமல் நிலவு நண்பன் ஞானியின் கவிதைகளும்,நிலா ரசிகனின் கவிதைகளும்.அட!யார்ரா இவுங்க என கவனிக்க ஆரம்பித்ததில்தான் ஒருநாள் தேடு பொறி வலையில் தமிழ் வலைபூக்கள் சிக்கின.அதன் பிறகே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வமும்,இணையத்தில் கவிதைகள் பதியும் ஆசையும் வந்தது அதை தொடர்ந்து கொஞ்சம் எழுதவும் தொடங்கினேன்.அதைத் தொடர்ந்து தமிழ்மணமும் உங்களின் அறிமுகமும்.இந்த வகையில் என்னை எழுத வைத்தது;உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தியவர் ரசிகவ் என்றால் மிகையல்ல.

நான் மிக ரசித்த "நீ எனக்கு வேண்டாமடி" ,"தூக்கம் விற்ற காசுகள்" இரண்டையும் எழுதியவரை தேடி நான் கண்டுக் கொண்ட இடம் அன்புடன்.

அன்புடன் குழுமத்தில் இணைந்த புதிதில் என்னை ஊக்கமூட்டி இன்னும் அதிகம் எழுத தூண்டியது ரசிகவின் கிண்டல் பதில் கவிதைகள்.பதில் கவிதைகள் எழுதுவதில் ரசிகவ்க்கு நிகர் ரசிகவே!ரசிகவின் கவிதைகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் அன்புடனில் உண்டென்றால் அந்த எண்ணிக்கைக்கு குறையாத ரசிகர் பட்டாளம் மற்றவர் கவிதைகளுக்கு அவர் இடும் மறுமொழி நக்கல் கவிதைகளுக்கும் உண்டு!

காதல் கவிதைகளை தருவதில் ரசிகவ் மிஞ்ச யாரும் இல்லை,அன்புடனில் 'அன்புடனின் தபூ சங்கர்' என்று ஒரு பெயரும் உண்டு அவருக்கு.ஞானிக்கு பிடித்து 'ஜர்னலிசம்' என பலதடவைச் சொல்லி கேட்டிருக்கிறேன்.கல்லூரி காலத்தில் பகுதிநேரமாக அதனாலேயே அவரது சமூகப் பார்வை கொஞ்சம் விரிந்தே இருக்கும்,அதன் வெளிப்பாடுதான் - அவரின் மன விதைதான் 'விதைகளாய்' வலைப்பூவாய் விதைக்கப்பட்டிருக்கிறது.

கவிதை , சமூக சிந்தனை இப்படி என்றால் ரசிகவ்வின் குறும்புக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை அவரின் நக்கல்,நையாண்டி,கேலி எல்லாமே மற்றவரை புண்படுத்தாமல் ரசிக்க சிரிக்க வைப்பனவாய் இருக்கும்.அவர் இப்போது கைப்பிடிக்கப் போகும் பெண்ணிடம் கூட அவர் 'பூரி' சேட்டை செய்திருக்கிறார்.அதனாலேயே அவருக்கு 'வால்' என்ற செல்லப் பெயரும் உண்டு அன்புடனில்.

'பூரிச் சேட்டை' யை ரசிகவ் வலைப்பூவில் இட்டமாதிரி தெரியவில்லை அன்புடன் குழுமத்தில் படிக்க : பூரிச் சேட்டை

ரசிகவ் எழுதிய கவிதைகள் பல பிடிக்குமென்றாலும்,சமீபத்தில் நான் ரசித்த அவரின் சில கவிதைகளை இங்கே தருகிறேன்

* பயம் *

முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் ...

அனிச்சை செயலாய்
மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!

- ரசிகவ் ஞானியார்.


* ஆறுதல் *

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

- ரசிகவ் ஞானியார்.


* ஒருநாள் அத்தனையும் மீறப்படும் *

வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!

வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்

- ரசிகவ் ஞானியார்


இன்னும் அவரைப்பற்றி சொல்ல நிறைய உண்டென்றாலும் மற்ற அன்பர்களும் நிலவு நண்பனைப் பற்றி சொல்ல இடம்விட்டு இப்போதைக்கு நகர்ந்து நிற்கிறேன்.

அதே சமயம் ரசிகவ் அவரைப் பற்றி அவரே என்ன சொல்லுகிறார்னு படிச்சு பாருங்க : அன்புடன் அறிமுகம் - ரசிகவ்.

கடைசியாக,
செல்வன் அண்ணா,நான் ரசிகவின் திருமணத்திற்கு பாளையங்கோட்டை செல்கிறேன்.பொன்ஸ் அக்கா சொல்வதுப் போல் அன்பர்கள் எல்லோரும் பதிவுப் போட்டு வெட்டி ஒட்டி கார்டாக தந்தால் ப்ரீ கொரியர் சர்வீஸ் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்,இதை அண்ணன் முத்துகுமரனின் பதிவிலும் நான் சொல்லி இருக்கிறேன்.

இதுத்தவிர கிப்ட் கொடுத்தனுப்புவர்களும் வெள்ளிக் கிழமை மாலைக்குள் என்னை தொடர்பு கொள்ளலாம்:

மடல் : mailtoviki@gmail.com
செல்பேசி : +91-98408-48453.

பொன்ஸின் நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனியின் For Nilavu Nanban!

மதுமிதாவின் பார்வைக்கு

வலைப்பதிவர் பெயர்: ப்ரியன் (எ) பழம்நீ.விக்னேஷ்

வலைப்பூ பெயர் : ப்ரியன் கவிதைகள்

உர்ல் : / சுட்டி http://priyan4u.blogspot.com/ - கவிதைகள் பக்கம்
http://enkanvaziyae.blogspot.com/- என் எண்ணங்கள்
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: கோவை தற்சமயம் சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை...இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05 சனவரி மாதம் 2005

இது எத்தனையாவது பதிவு: இதோடு 141

இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://priyan4u.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கவிதைகள் சிலதையும் கவிதைப் போன்ற பலதையும் இணைய நண்பர்களுடன் பக்ர்தல் பொருட்டு...

சந்தித்த அனுபவங்கள்: என்னைப் பொருத்தவரை எல்லாமே இனிமை...அரசியல் / சாதி / மத பதிவுகள் தவிர்த்து கவிதைகள் அதிகம் பதித்ததால் இருக்கலாம்

பெற்ற நண்பர்கள்: கணக்கில் அடங்கா - நல் உள்ளங்கள் - உண்மையான நலம் விரும்பிகள்

கற்றவை: ஏராளம்...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அதிகம்...அச்சுதந்திரம்தான் வலைப்பூவின் பலமும் பலவீனமும்

இனி செய்ய நினைப்பவை: எழுத்துகளை மெருக்கேற்றும் முயற்சிகள்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்