இன்னும் இருக்கிறது ஆகாயம் - 4

ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!

தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!

மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!

இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

3 பின்னூட்டங்கள்:

tamizhppiriyan said...

அருமையான வ‌ரிகள்!..வாழ்த்துக்க‌ள்

ராசுக்குட்டி said...

ப்ரியன் கவிதை மிக நன்று

யோசிப்பவர் said...

ப்ரியன்,
நன்றாய் எழுதுகிறீர்கள். கொஞ்சம் காதலை விட்டு வெளியே வந்தும் முயற்சிக்கலாமே!!!