மெளனம்

முதல் சந்திப்பில்
மெளனத்தையே பதிலாக
தந்தாய்...
ஆனாலும் உன் மனதில்
எழுந்த வார்த்தைகள்
கேட்கத்தான்
செய்தது எனக்கு !

- ப்ரியன்.

வராதே

"என் அருகே வராதே"
என்கிறாய்!
உன்னையே கட்டிக்கொண்டு
திரியும் இவன் காதலை
என்ன செய்வாய்?

- ப்ரியன்.

கலைடாஸ்கோப்

கலைடாஸ்கோப் பற்றிய
என் சின்னவயது சந்தேகத்திற்கு;
கண்ணாடி வளையல்
அணிந்த
அவளின் கைகளை
அப்படியும் இப்படியும்
திருப்பிக் காட்டி
இப்போது புரிய வைக்கப்
பார்க்கிறது காதல்!

- ப்ரியன்.

ஊஞ்சல் ஆடுகிறது காதல்!

அவளின் இதயத்தில்
ஒருமுனைக் கட்டி
எந்தன் நெஞ்சத்தில்
மறுமுனைக் கட்டி
பத்திரமாய்
சுகமாய்
ஊஞ்சல் ஆடுகிறது
காதல்!

- ப்ரியன்.

அழிச்சாட்டம் செய்கிறது என் காதல் குழந்தை

அதோப் பார்
நீதான் வந்து தொட்டுத்
தூக்க வேண்டுமென்று
உருண்டு பிறண்டு
கைகால் உதைத்து
கத்தி அழிச்சாட்டம் செய்கிறது
என் காதல் குழந்தை!

- ப்ரியன்.