விழி வழிந்து

அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;

கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;

சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;

எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;

வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்

கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

Dhavappudhalvan said...

நானும் கற்றுக் கொள்வேன் உங்களிடமும்.

aambalmalar.blogspot.com-ஐ ஒரு முறை திறந்து பாருங்களேன்.