#
பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!
#
உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!
#
என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
#
உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!
#
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!
#
- ப்ரியன்.
3 பின்னூட்டங்கள்:
சோகமாய் இருக்கே :(
இனிய கவிதை விக்கி..
அன்புடன்,
அப்துல் கரீம்(from CPT) :)
unkal muthal kavithai haikoo pola
kaathalil tholvi uttavan kandippaga thaan tholaitha natkalai meendum ninaithu nekiluvan
konjam nenjai pisaikirathu lla
vi
Post a Comment