கோபமும் காதலும்
என்றும் அதிர்ந்து கூட
பேசாதவன்;
திட்டி விட்டேன் கடுமையாய்!
கடைக்கண்ணில் சேரும்
கண்ணீர் துளிக் கண்டு!
பூமிக்கும் ஆகாயத்திற்கும்
குதித்து ஏசியது காதல்
காதலிக்கத்
தகுதியில்லாதவனென்று சொல்லி!
மெல்ல மெல்ல என் முகம் நகர்த்தி
உன் கண் மீது என் கண் பதித்து
முகம் தன்னை கையில் ஏந்தி
இதழ் கொண்டு கண்ணீர் துளி குடிக்க!
ச்சீ!போடா சொல்லி
அணைத்து இறுக்கி கொள்ள
உன் முகம் முழுதும்
வெட்க மருதாணி!
காதலிக்க இவனிடம் தான்
பாடம் படிக்க வேண்டும்
என்று ஏதோ முணுமுணுத்தப் படி
நகர்ந்தது காதல்!
- ப்ரியன்.
2 பின்னூட்டங்கள்:
ப்ரியன்,
நன்றாய் இருக்கிறது :-).
As muthu said .. this poem is good. Nalla karpanai
Post a Comment