சுல்தான் - கண்ணு இது புதுசு
நீங்கள் ரஜினி ரசிகரா?
நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?
இதோ உங்களுக்கான விருந்து...
சுட்டி : http://www.sultanthefilm.com/
நீங்கள் ரஜினி ரசிகரா?
நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?
இதோ உங்களுக்கான விருந்து...
சுட்டி : http://www.sultanthefilm.com/
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் பிற
இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்
ஆறுதல் பரிசு 1 :
கார்த்திக் பிரபு, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
சோ. சுப்புராஜ், துபாய்
இரண்டாம் பரிசு :
தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை
முதல் பரிசு :
ஜாபர் அலி, துபாய்
ஊக்கப்பரிசு :
லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை
உஷா, சென்னை
மாதங்கி, சிங்கப்பூர்
கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா
நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்
மேரித் தங்கம், சென்னை
இளா, நாமக்கல்
அருட்பெருங்கோ, சென்னை
மதுமிதா, சென்னை
இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்
ஆறுதல் பரிசு 1 :
பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்
ஆறுதல் பரிசு 2 :
பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி
இரண்டாம் பரிசு :
பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ
முதல் பரிசு :
பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி
ஊக்கப் பரிசு 1:
கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி
ஊக்கப் பரிசு 2:
கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி
ஊக்கப் பரிசு 3:
கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை
ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்
ஆறுதல் பரிசு 1 :
கவிஞர் மதுமிதா, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
V. லஷ்மணக்குமார், மதுரை
இரண்டாம் பரிசு :
ஷைலஜா, பெங்களூர்
முதல் பரிசு :
மு. பாண்டியன், நெய்வேலி
படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்
ஆறுதல் பரிசு 1 :
கே. வி. உஷா, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
மு. பாண்டியன், நெய்வேலி
இரண்டாம் பரிசு :
சோ. சுப்புராஜ், துபாய்
முதல் பரிசு :
மேரித் தங்கம், சென்னை
காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு 1 :
கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா
ஆறுதல் பரிசு 2 :
ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா
இரண்டாம் பரிசு :
முத்துலட்சுமி , புது தில்லி
முதல் பரிசு :
சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை
நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு : அருவி
- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா
ஆறுதல் பரிசு : மூப்பு
- ஆர்.எஸ். மணி
கேம்ப்ரிட்ஜ், கனடா
இரண்டாம் பரிசு : பூங்கா
- முத்துலட்சுமி
புது தில்லி
முதல் பரிசு: உயிர் வலிக்க வலிக்க...
- சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா
மாவனல்லை, இலங்கை
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;
கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;
சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;
எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;
வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்
கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
இனிய அன்பர்களே,
அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.
அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான
ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்
இதோ இதோ வந்துவிட்டது....
மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்
நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,
பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,
எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்
என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு
அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.
அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.
அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,
66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு
கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.
அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,
யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,
தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று
ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.
எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு
அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.
அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி
பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.
அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்
வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.
அன்புடன் சுடரோட்டம்
- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் தித்திப்பு யுத்தம்
- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது
அன்புடன் பட்டிமன்றம்
- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் கவிதைப் போட்டிகள்
- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :)
அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக
கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று
தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.
துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்
மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி
சேதுக்கரசி செய்து வருகிறார்.
முடிவுகளை அறிந்துக்கொள்ள : அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் படியுங்கள்
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்