நீ...

*

நீ
மௌனம் மொழியும்
கவிதை!

*

நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!

*

நீ
உயிர் சூடும்
பூ!

*

நீ
எழுதா
கவிதை!

*

நீ
என் காதலுக்கான
தண்டணை!

*

- ப்ரியன்.



*

நிலாரசிகனின் : நீ

நவீன் ப்ரகாஷின் : நீ

8 பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் said...

//
நீ
மௌனம் மொழியும்
கவிதை
//

அருமை :-)

வாழ்த்துக்கள் தல‌!!!

த.அகிலன் said...

நல்ல வரிகள் விக்கி அண்ணா எனக்கும் கை குறு குறுத்ததால்..

நீ
என்
உயிர் சுடும்
தீ

Anonymous said...

பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.

Anonymous said...

NEE ELUTHAA KAVITHAI

varnikkave vendam athanaiyum adakkam

kavithai surakkum kavithaikal
vi

நாடோடி இலக்கியன் said...

//பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!//


சிலிர்க்க வைக்கும் கற்பனை!!!

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரியன் கவிதைகள் அனைத்தும் அழகு அழகு அழகான அழகு !!! :))

எழில்பாரதி said...

விக்கி

அருமையான கவிதைகள்....

உங்க கவிதைக்கு கவிதை அழகா இருக்கு!!!!!(புரியுதா).......

ச.பிரேம்குமார் said...

//பிரியனைத் தல என்ற பிரேம் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம். //

ஆகா, பத்த வச்சிட்டியே பரட்டை ;)