சில காதல் கவிதைகள் - 11

#

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

#

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

#

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

#

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

#

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!

#

- ப்ரியன்.


3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோகமாய் இருக்கே :(

Anonymous said...

இனிய கவிதை விக்கி..

அன்புடன்,
அப்துல் கரீம்(from CPT) :)

Anonymous said...

unkal muthal kavithai haikoo pola

kaathalil tholvi uttavan kandippaga thaan tholaitha natkalai meendum ninaithu nekiluvan

konjam nenjai pisaikirathu lla
vi