அன்புடன் கவிதைப்போட்டி முடிவுகள்

இனிய அன்பர்களே,

அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.

அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான
ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்
இதோ இதோ வந்துவிட்டது....

மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்
நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,
பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,
எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்
என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு
அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.

அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.
அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.

இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,
66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு
கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.

அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,
யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,
தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று
ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.

எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு
அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி
பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.
அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்
வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.

அன்புடன் சுடரோட்டம்
- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது

அன்புடன் தித்திப்பு யுத்தம்
- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது

அன்புடன் பட்டிமன்றம்
- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது

அன்புடன் கவிதைப் போட்டிகள்
- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :)

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக
கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று
தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.

துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்
மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி
சேதுக்கரசி செய்து வருகிறார்.

முடிவுகளை அறிந்துக்கொள்ள : அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் படியுங்கள்

0 பின்னூட்டங்கள்: