முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!

*

மாராப்புக்கு
பின்போட்டுக் கொள்ளும் சமயங்களில்;
பின்னாக எனைக் குத்திக் கொள்ளேன் என்று
என்றோ அவன் சொன்ன
ஒற்றைவரி மனம் கொத்தி நிற்க
முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

*

மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!

- ப்ரியன்.

3 பின்னூட்டங்கள்:

G.Ragavan said...

:-) இளமைத் துள்ளலோடு கவிதைகள்...ரசித்தேன்.

Anonymous said...

என்ன சொல்லி என்ன சொல்ல?
காதல் உன்னை கையால் தள்ள‌
இதயம் தான் சரிந்ததே உன் கவிதையில் மெல்ல

கவிதையை பாத்துட்டு பேச்சு வரல.. அதான் ஒரு பாட்ட அவுத்து விட்டேன் ;-)

Anonymous said...

Mr.Priyan,
Neenga enna kathalin mottha uruvama
kathal, kathal....
antha `manmadhan' pol neenga enna
kathal mannana - eppadippa ippadi
eppavum kathal rasanaiyudan
enjoy the life. In practial life also are you like this only.
it is a gift.
vijai/tr - could you remember me
once a sent a email to you.