அவனை முந்தானையாய் சுமக்கும் தருணங்கள்!
மொத்தம் எட்டு இடத்தில்
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான்
பிரம்மன் உன்னில் என்கிறான்!
அடக் கடவுளே!
எனக்கே தெரியாத இடத்தில் ஒன்றா?
எப்படி கண்டுகொண்டான் இவன்!
*
காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!
*
அவனை முந்தானையாய்
சுமக்கும் தருணங்களைவிட
அற்புதமான தருணங்களிருப்பதாய்
தெரியவில்லை எனக்கு!
- ப்ரியன்.
3 பின்னூட்டங்கள்:
அங்கங்கு தபூசங்கர் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார் அழகாக உங்கள் கவிதைகளில் ப்ரியன்..
வாழ்த்துக்கள்..
இது கொஞ்சம் அதிகம் தான்! ஆனால் அழகாக இருக்கிறதே!!
வாழ்த்துக்கள்!
kocchaipaduthi parkamal
kavithayai kavithayai mattum parkka
rasanai sottukirathu
kadhalukkenta padaithana unnai
Post a Comment