நீ நதியாக!

கரையாக
படர்ந்து கிடக்கிறேன்!
தொட்டு தவழ்ந்து
சிலிர்ப்பூட்டியபடி
நகர்கிறார் நீ நதியாக!

*

பட்டுப்போன
பூக்களாக
என் கவிவரிகள்!
உன் வாசிப்பில் மயங்கி
பூரித்து பூக்கிறது
புதுப் பூவாய்!

*

உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!

*

நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!

*

இதயத்தின் நான்கு
அறை சுவர்களிலும்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன் பு(ன்ன)கைப்படத்தினை!

- ப்ரியன்.

6 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] said...

//உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!//

ப்ரியன் ... மீன் தூண்டில் போடுவதாக மாறுபட்ட சிந்தனை நன்றாக இருக்கிறது.. படித்தேன் ரசித்தேன் !

நவீன் ப்ரகாஷ் said...

//நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!//

என்ன ஒரு அழகான கற்பனை !!! வாழ்த்துக்கள் ப்ரியன் :))

Unknown said...

//உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!//

Super

ப்ரியன் said...

நன்றி கண்ணன் , நவீன் & தேவ்

thiagu1973 said...

இதயத்தின் நான்கு
அறை சுவர்களிலும்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன் பு(ன்ன)கைப்படத்தினை!

- கற்பனை உவமை அதிகமாக மிக
நலினத்துடன் உள்ளது தங்கள் கவிதை ப்ரியன்

தியாகு

ப்ரியன் said...

நன்றி யாழ் அகத்தியன் & தியாகு