சட்டென நனைந்தது நெஞ்சம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

இந்த பாடல் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் மாதவனும் சிம்ரனும் காதலிக்கும் "ப்ளாஷ் பேக்" (தமிழில்??) கில் வரும் காதல் பாடல்.என்னமாய் கரைந்திருக்கிறார் வைரமுத்து பாருங்கள்,அதே போல ஏ.ஆர்.ரஹ்மானும்.மணியும்,ஏ.ஆர்.ஆர் - உம் , வைரமுத்துவும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் :) இந்த பாடல் குறுந்தகட்டிலோ ,கேசட்டிலோ வரவில்லை.MP3 கோப்பு வேண்டுவேர் இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.(கேட்டதும் கூகிள் உதவியுடன் தேடி MP3 அனுப்பிய நண்பர் ப்ரேம்க்கு நன்றி)

3 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பாட்டு.. எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு.. நன்றி ப்ரியன் & ப்ரேம்.. :)

Chandravathanaa said...

நன்றி ப்ரியன்

வெற்றி said...

ப்ரியன்,
பாடல் சுட்டிக்கு நன்றி.