இரண்டு கடல் கவிதைகள்

மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!

- ப்ரியன்.

கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

- ப்ரியன்.

12 பின்னூட்டங்கள்:

செல்வேந்திரன் said...

கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!


Kud one ;-)

ப்ரியன் said...

நன்றி செல்வா!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!//

அதப் பார்த்துக்கிட்டே நீங்க உங்க ஜோடியோட நடந்து போனீங்களாக்கும் :)

ப்ரியன் said...

இல்லை ரசிகவ் அப்படி போயிருந்தால்

மெல்ல நடைப்பயில்கிறது
/*பெளர்ணமி நிலவுகள்*/
கடற்கரையோரமாய்!

அப்படின்னு அல்லவா வந்திருக்கும் ;)

Chellamuthu Kuppusamy said...

குழந்தை வரிகள் அருமை..

சிந்து said...

நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிதை வாழ்த்துக்கள் பிரியன்.

ப்ரியன் said...

நன்றி குப்புசாமி செல்லமுத்து!

ப்ரியன் said...

மிக்க நன்றி சிந்து...

வவ்வால் said...

நறுக்கு தெரித்தாற்போல் அருமையான கவிதைகள் பிரியன்.

சுஜா செல்லப்பன் said...

"கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!"
அருமையான வரிகள் ப்ரியன்....வாழ்த்துக்கள் !

ப்ரியன் said...

@ வவ்வால்

நன்றி வவ்வால்!

ப்ரியன் said...

@ சுடர்விழி

நன்று சுடர்!எப்ப வலைப்பூ ஆரம்பித்தீர்?சொல்லவே இல்லை :)