சில காதல் கவிதைகள் - 8

உன்னைக் கண்டப் பிறகுதான்
அழகென்பது
உடலிருந்து
உள்ளத்துக்குத் தாவியது
எனக்கு!

- ப்ரியன்.

விடம்;
அமுதம்;
எதுவென அறியத்தராமல்
குடித்துப் பார்த்து
அறியும் விளையாட்டு
காதல்!

- ப்ரியன்.

அழகு
உவமைகளை உனக்கு
உவமானம் ஆக்குதலைவிட
உவமைகளுக்கு உன்னை
உவமானம் ஆக்குதலே
தகும்!

- ப்ரியன்.

என்னைப் பார்த்ததும்
நீ
ஊமையாகிவிட்டால் என்ன?
உன்
நாணம்தான்
சொல்லாகிவிட்டதே!

- ப்ரியன்.

இதயதரையில் நீ
நடந்துச் சென்ற
சுவடுகளிலெல்லாம்
கவிதை பூத்து
அழகுபார்க்கிறது காதல்!

- ப்ரியன்.

கரு மை வைக்கிறாய்
திருஷ்டி கழிகிறது
கண்களுக்கு!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

நவீன் ப்ரகாஷ் said...

//கரு மை வைக்கிறாய்
திருஷ்டி கழிகிறது
கண்களுக்கு! //

மிகவும் ரசித்தேன் :)

தொடரட்டும் உங்கள் காதல் மழை !

ப்ரியன் said...

நன்றி நவீன் :)