பெண்மையே உன்னை போற்றுதும்

அன்புக்கு அம்மா!
ஆசைக்கு மகள்!
பாசத்திற்கு தங்கை!
நேசத்திற்கு மனை!
எப்பெயர் நீ கொளினும்
அதுவாகவே ஆகிப்போகிறாய் நீ!
உன்னாலேயே
அர்த்தம் பெறுகின்றன
அவ்வுறவுகள்!

பொறுமைக்கு நீயென
பூமிக்கு உன்னை குறித்தோம்!
நடக்கும் வழியெல்லாம் தாயுள்ளமாய்
தழுவிச் செல்லும் நதிக்கும்
உன்னை வைத்தோம்!

* மகனாக்கி
தமயனாக்கி
தகப்பனாக்கி
நண்பனாக்கி * (நன்றி பரநீதரா)
இன்னும் பலவாக்கி
உலகுக்கெல்லாம்
எம்மை
அடையாளம் காட்டியவளே!

உன்னில் என்னில்
என்று பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ நிறைந்து நிற்கும்
பண்பாலே
இவ்வுலகம் நிலைத்திருக்க செய்தவளே!

பெருமைமிகு
பெண்மையே
உன்னைப் போற்றுதும்!

0 பின்னூட்டங்கள்: