சில காதல் கவிதைகள் - 4

உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!

- ப்ரியன்.

ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!

- ப்ரியன்.

உன்னைப் பூவென
மயங்கி சுற்றித் திரியும்
வண்டுகளுக்கு சொல்லிவிட்டாயா
உன் இதழ் தேன்
நான் உண்ண மட்டுமென?

- ப்ரியன்.

கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!

- ப்ரியன்.

உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!

- ப்ரியன்.

வெட்கத்தோடு என்னை தழுவுகிறாய்!
அதை கண்ட வெட்கத்தில்
வாசல்கண்ணை படாரென
சாத்துகிறது காற்று!

- ப்ரியன்.

தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!

- ப்ரியன்.

அழகுக்கு விளக்கம் கேட்ட
குழந்தைக்கு
உன்னைக் காட்டினேன்!
வெட்கத்தோது மாரில் முகம் புதைத்தாய்
அடடா!பேரழகு!

- ப்ரியன்.

ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!

- ப்ரியன்.

நம் இருவர் புகைப்படமெடுத்து
கருப்பு வெள்ளை மையில்
வயதான நம்மை வரைந்திருந்தாய்
கவனித்தாயா?
எல்லாம் மாறியிருந்தது
நம் காதலை தவிர!

- ப்ரியன்.

கோபம் மறந்த
அக்கணத்தில் கண்மூடி
புன்னகைத்தாய்!
ஒரு பட்டாம்பூச்சியின்
சிறகசைப்போடு என்னை வந்து
கட்டிக் கொண்டது காதல்!

- ப்ரியன்.

நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!

- ப்ரியன்.

என்னை அதிகமாய்
கனவு காண செய்தவர்களுக்கு
என் தண்டனை

தமிழுக்கு - என் கவிதை

உனக்கு - என் காதல்!

- ப்ரியன்.

நீ கண்மேய்ந்த இடத்திலிருந்த
என் எழுத்துக்கள்
பிரசவமாயிருந்தன
கவிதைகளாய்!

- ப்ரியன்.

குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை!

- ப்ரியன்.

தலைகுளித்து வெளிவந்தாய்
தொலைவானத்து நட்சத்திரங்களாய்
கூந்தல் ஏறி அமர்ந்திருந்தன
நீர் துளிகள்!

- ப்ரியன்.

நீ கண்மூடிச்
சொல்லும்
"அர்சுனா ! அர்சுனா !"
அழகிற்காகவே
அடிக்கடி சாட்டைச் சுழற்றுகிறானாம்
கிருஷ்ணன்!

- ப்ரியன்.

12 பின்னூட்டங்கள்:

அருள் குமார் said...

மனதை சிலிர்க்கச்செய்கிற கவிதைகள். படிக்கையில் காதல் மீது காதல் வருகிறது. இந்த வரியே உங்கள் கவிதைகளின் பாதிப்புதான்! நிறைய எழுதுங்கள். புத்தகமாக பதிப்பிக்க முயற்சியுங்கள். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....
- அருள்.

நளாயினி said...

adaaaa.. ! vaalthukal alakaana kavethai

Anonymous said...

Kalakureenga Priyan!! Paratukkal...innum niraya ezhuthungal

ப்ரியன் said...

நன்றி அருள்...நளாயினி...மற்றும் அநானிமஸ்

Anonymous said...

பேத்தல் கவிதைகளுக்கு பேத்தல் பின்னூட்டங்கள்

ப்ரியன் said...

/*பேத்தல் கவிதைகளுக்கு பேத்தல் பின்னூட்டங்கள்*/

விமர்சனத்திற்கு நன்றி அநானிமஸ்...இனியாவது பேத்தல் கவிதைளுடன் சில நல்ல கவிதைகளும் இட முயற்சிக்கிறேன்.

யாத்ரீகன் said...
This comment has been removed by a blog administrator.
யாத்ரீகன் said...

கல்கியில் உங்கள் வலைப்பூ..

வாழ்த்துக்கள் ப்ரியன்...!!!

-
செந்தில்/Senthil

ப்ரியன் said...

நன்றி செந்தில்

J S Gnanasekar said...

தபூ சங்கரின் கவிதைகள் போல மிக எளிமையாய், ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கின்றன. மிகவும் ரசித்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.

ப்ரியன் said...

நன்றி ஞானசேகர்

யாத்ரீகன் said...

ப்ரியன்.. எனது ஒரு சிறு முயற்சி

http://yaathirigan.blogspot.com/2005/11/blog-post_16.html

-
செந்தில்/Senthil