கவிஞன்_காதலன்

*ஒரு கரு மூன்று கவிதைகள் - ஒரு சிறு முயற்சி*

நான் கவிஞனாக இருந்திருந்தால்
நிலா போல் சூரிய கதிர்களை தின்று
ஒளி கொடுக்கின்றது உன் முகம் என்றிருப்பேன்!
காதலனாய் இருப்பதினால்
சூரியன் மட்டுமல்ல உன் முகமும்
தானே பிரகாசிக்கக் கூடிய
ஆற்றல் கொண்டதென என்றுரைக்கின்றேன்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகமே தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்
பித்து காதலன் என்கிறார்கள்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகம்,தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்;
பித்து காதலன் என்கிறார்கள்!

ம் மென வெட்கப் பூ பூத்துவிடு,
சூரியனுக்கே ஒளிப் பிச்சையிடுவது
உன் முகமென
நிரூப்பித்துக் காட்டுகின்றேன்!

- ப்ரியன்.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

À¢òÐì ¸¡¾Äý ±ýÀ¨¾ Å¢¼ '¸¡¾ø À¢ò¾ý' ±ýÀÐ ºÃ¢Â¡¸ þÕìÌõ!
ÓÂüº¢ìÌ Å¡úòÐì¸û!

கயல்விழி said...

சும்மா சொல்லக்கூடாது நல்ல கவிஞர் தான் நீங்கள். நிலவை பெண்ணிற்கு ஒப்பிடுபவர்கள் அதிகம். சூரியனோடு இப்படி ஒப்பிடுபவர்கள் குறைவு. நன்றாக இருக்கிறது உங்கள் முயற்சி. :-)

ப்ரியன் said...

நன்றி கயல்விழி & Anonymouச்(பெயர் என்னவோ அன்பரே)