பார்வை

உன் பார்வை
என் விழியில்
செய்த நுண்ணிய;
மிக நுண்ணிய
ஓட்டையின் வழியே
முழுதாய் உள் புக்கு
என்னை
நிரப்பிவிடப் பார்க்கிறது
காதல் கடல்!

- ப்ரியன்.

5 பின்னூட்டங்கள்:

Sud Gopal said...

உங்களது காதல் பற்றிய பகிர்தல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு காதல் சிறகுகள் முளைத்த உணர்வு...

அய்யோ..எனக்கும் கொஞ்சம்,கொஞ்சம் கவிதயா எழுத வருதே???

ஆமாம்,"மயிலிறகே,மயிலிறகே"
(அஆ:S.Jசூர்யா.)கேட்டீங்களா???
அட்டகாசமான பாட்டு.

யாத்ரீகன் said...

காதல்ன்ற கருமாந்திரம் வந்துட்டா, எல்லோரும் கவிஞனாயிடலாம், சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)

ப்ரியன் said...

இன்னமும் இல்லை கோபால்...அ...ஆ...பாடல்கள் எதுவும் இன்னமும் கேட்கவில்லை...

செந்தில் சொல்வது போல் காதல் உணர்வு வந்தால் எல்லோரும் ஒரு கவிதையாவது எழுதிவிடலாம்

Sud Gopal said...
This comment has been removed by a blog administrator.
Sud Gopal said...

"சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)"
காதலிக்க சொன்ன செந்தில் அண்ணாத்தே,நெம்போ டாங்ஸ்.
என்னோட இலவ்வு அனுபவங்களை இங்கே கொட்டி வச்சிருக்கேன்.நேரம் கிடைக்கறப்ப படிச்சுப் பாருங்க.

http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_25.html

http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_18.html

http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_05.html
அப்பரமா,கோவாலுங்கறது எம்பட
அய்யனோட பேரு.என்னை சுதருன்னு கூப்டாலே போதும்.அமெரிக்காயில நீங்க எடுத்த போட்டோ எல்லாம் சோக்கா இருக்குங்ணா...