உன் பலம்

நீ!
நதிமூலத்தின்
முதல்துளி போல்
பரிசுத்தமானவன்!

நீ!
காடு கடையும்
வெள்ளம் போல்
வேகமானவன்!

நீ!
மலை தொங்கும்
அருவி போல்
பலமானவன்!

நீ!
சமவெளி தங்கும்
ஆறு போல்
வியஸ்திரமானவன்!

நீ!
ஆறு சேர்க்கும்
மண் போல்
சத்தானவன்!

நீ!
கடல் புகும்
நதி போல்
அமைதியானவன்!

நீ!
நதி சேர்த்துக் கொண்ட
கடல் போல்
ஆழமானவன்!

நீ!
கட்டியிழுக்க
காத்திருக்கின்றன
ஆயிரம் இமயங்கள்!

நீ!
உடைத்துப் போட
பார்த்திருக்கின்றன
திசைகள்!

நீ!
பறித்து விளையாடவே
படைக்கப் பட்டிருக்கின்றன
விண்மீன்கள்!

நீ!
நடக்கும் நடையில்
பொடிபடவே பரவிக் கிடக்கின்றன
தடைகள்!

உன்னை
உன்னையேதான் தர கேட்டான்
விவேகானந்தன்
ஒற்றை நூற்றாண்டுக்கு முன்!

நீ!
தோல்வி கண்டு
துவண்டு போனால்
அதுவே ஆகும்
உனக்கு சாக்காடு!

நீ!
தோல்வி முதல் படியாக்கி
ஏறி மிதித்து
வெற்றி தொட்டு பறித்தால்
உலகம் உருவாக்கிக் கொடுக்கும்
உனக்கொரு பூக்காடு!

வா,
உன் பலம் கொண்டு
தோல்விகளுக்கு எதிராய்
ஒரு வழக்காடு!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

Anitha Jayakumar said...

words ellam sethukkina madhiri perfecta irukku... very broad imagination... hats off...