முத்து

என் விழியில்
பத்திரமாய் விழுந்து
முத்தாய் முளைத்த
ஒற்றை மழைத்துளி
நீ!

*****************

என் உயிர்விதையை
உன் கடலுள்
பத்திரப்படுத்தி நீ
சமைத்த முத்து
நம் குழந்தை!

*****************

என்னுள் விழுந்த
உன் அழகை
மொத்தமாய் சொல்லமுடியாமல்
குட்டி குட்டியாய் சொல்லி
நான் படைத்த முத்துக்கள்
என் கவிதைகள்!

1 பின்னூட்டங்கள்:

யாத்ரீகன் said...

enna ப்ரியன்,
kuti kavidhaigal-la mungiyaacha, adhaan முத்து eduthachula, inni konjam ungal kavidhai thodar ondrai aarambikalamay !!!