கவிதை ஒர் குழந்தை

காலை ஓட்டத்தில்
கால்சுற்றும் நாய்குட்டியாய்;
அலுவலக அவசரப்
புறப்பாட்டில் அவஸ்த்தையாய்;
கால்மாற்றி காலுறை
நுழைக்கையில் கடுப்பாய்;
படிக்கட்டில் ஒட்டிய
பேருந்துபயணத்தில் இடிக்கும் பயணியாய்;
பாதைக் கடக்கையில்
எதிர் கடக்கும் பள்ளிச்சிட்டாய்;
அலுவலக கலந்துரையாடலில்
சுவற்றில் ஓடியாடும் பல்லியாய்;

கூடவே துரத்தி வந்து
பிடித்துக்கொண்டால்தான் ஆச்சு என
நச்சரிக்கும்!

வேலையெல்லாம் முடித்து
அதற்கென காத்திருக்கையில்;

முடிந்தால் பிடித்துக்கொள்
சொல்லிச் சொல்லி
விலகி ஓடி ஒளியும்
கவிதை;
"ஒர் குழந்தை"!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

பத்ம ப்ரியா said...

This poem is fantastic priyan. Yes.. poems are always like a kid.