அழகு

அழகான என் கவிதைகளையெல்லாம்
அழைத்து உலகத்தில்
அழகு எதுவென்றேன்?
இதில் என்ன சந்தேகம்
நாங்கள்தான்
முந்திரிக் கொட்டையென
முன்னால்
வந்து நின்றன!

சிரித்துக் கொண்டே
உன் பக்கம்
பார்த்தேன்!
ம்.ம்கூம்.கொஞ்சம் கோபமாய்
கனைத்தாய்!

ஐய்யோ!
இந்த அழகு பிசாசு
இங்கேயா இருக்கிறது
சொல்லி ஓடி ஒளிந்தன
சட்டென கால் கை முளைத்த
கவிதைகள்!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: