இதற்காக இருக்கலாம்!

ஒர் முன்பனி இரவில்
அருகில் துயிலும்
இல்லாளும் அருமை மகனும்
பாம்பு தீண்டி
இறந்துப்பட்டதாக
கனவு கண்டு
உறக்கம் களைந்து
பதறி எழுந்து
அவர்கள் பத்திரம்
உண்ர்ந்து ஆசுவாசப்படுத்தி
மேசையில் அமர்ந்தது;

ஒருவேளை இதை
எழுதுவதற்காக இருக்கலாம்!

0 பின்னூட்டங்கள்: